search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணி நூல்"

    வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மணியன் தமிழக சட்ட பேரவையில் கைத்தறி மான்ய கோரிக்கை நாள் 08.06.2018 அன்று தமிழகம் முழுவதும் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், இடைகால் பகுதி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால், நோய் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. எனவே வீரவநல்லூர், புகுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாச முத்திரம் மற்றும் இடைகால் பகுதி நெசவாளர்கள் பெருமளவில் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நெல்லை கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் கேட்டுக்கொள்கிறார்.
    ×